கனிஷ்கா 3 வகுப்பு மாணவி – சாதனை
கனிஷ்கா 3 வகுப்பு மாணவி. தாவர பாகங்களின் பெயரை தன் இரு கைகளால் 56 நிமிடத்தில் எழுதி Divine World Book of Records உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். டிவைன் குழுமத்தின் சார்பாக இவருக்கு பாராட்டுக்கள்.

கனிஷ்கா 3 வகுப்பு மாணவி. தாவர பாகங்களின் பெயரை தன் இரு கைகளால் 56 நிமிடத்தில் எழுதி Divine World Book of Records உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். டிவைன் குழுமத்தின் சார்பாக இவருக்கு பாராட்டுக்கள்.
27.5.2023 மற்றும் 28.5.2023 கோவை கருமத்தம்பட்டி உள்ள Janson இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் தொடர்ந்து 42 மணி நேரம் கோவை ஸ்ரீ ஆண்டாள் நாட்டியாளையம் திருமதி. லாவண்யா அவர்கள் நடன நிகழ்ச்சி நடத்தினார்கள் .
300 க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கு பெற்ற இன் நிகழ்ச்சியில் 10 வகையான நடனங்கள் ஆடி உலக சாதனை செய்தார்கள்.
பரதம், குச்சிப்புடி, செமி கிளாசிக்கல், மேற்கத்திய நடனம், காவடி ஆட்டம், வள்ளி கும்மி நடன வகைகளும் இதில் இடம் பெற்றன.
தொடர்ந்து 42 மணி நேரம் நடந்த இன் நிகழ்ச்சிஇன் நிகழ்ச்சி
Divine World Book of Records உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுது.
திரு A. சேகர், கோவை சிட்டி துணை கமிஷனர், தலைமை ஏற்றும் Janson கல்லூரி பேராசிரியர் திரு. M. V. சுரேஷ் குமார் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.
குருபாதம் 🙏
திருச்சிற்றம்பலம் 🙏
தருமை ஆதீனம் 27 வது குருமணிகளின் சமுதாயத் தொண்டும், சமயத் தொண்டும், சிறப்பாக செய்து வருவதையும். அவர் பதவியேற்று இரண்டு ஆண்டுகளில் பல்வேறு சாதனை செய்து வருவதையும் . அவருடைய சாதனைகளை பாராட்டும் வகையில்
Divine World Book of Records நிறுவனம்
சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது .
குருமணிகள் செய்த சாதனைகள் :
23 மே 2023 செவ்வாய் கிழமை மாலை 4 மணிக்கு சீர்காழி ஸ்ரீ சட்டைநாத சுவாமி தேவஸ்தானத்தில் 5000 நடன கலைஞர் ஆடுவதாக கூறி 7000 நபர்கள் சிறப்பாக நடனம் ஆடி டிவைன் உலக சாதனை புத்தகத்தில் இன் நிகழ்ச்சி இடம் பெற்றது. இன் நிகழ்ச்சியின் சான்றிதழ் ஸ்ரீலஸ்ரீ யிடம், தமிழக ஆளுநர் அவர்களிடமும் ஒப்படைக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து நடனமங்கை என்ற பட்டத்தை திருப்பூரை சேர்ந்த சாய்ஸ்ரீ அவர்கள் பெற்றுக் கொண்டார்.
26.02.2023 இன்று சர்வதேச தாய் மொழி தினத்தை முன்னிட்டு மொழி மற்றும் கலாச்சாரம் பன்முகத் தன்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் Divine World Book of Records மற்றும் திருப்பூர் Jikina Silambam Acadamy யும் இணைந்து Turf- 1, Ground, காங்கேயம் பாளையம் புதூர், திருப்பூர். 5 முதல் 18 வயதுக்குள், 75 மாணவர்களும் சென்னையில் இருந்து ஆன்லைன் மூலம் 25 மாணவர்களும் கலந்துகொண்டனர்.
2023ம் ஆண்டை முன் வைத்து 20 நிமிடம் 23 வினாடிகள் தொடர்ந்து சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இன் நிகழ்ச்சியின் இறுதியில் டிவைன் உலக சாதனை நிறுவனத்தின் தலைவர் திருமதி. கிருத்திகா தேவி, பகதூர் நிஷா, திருப்பூர் காவல் துறை அதிகாரி, புலன் ஆய்வு துறை, திருப்பூர்,சுப்ரிம் மொபைல், நிறுவத்தின் தலைவர் திரு.ராதாகிருஷ்ணன், மற்றும் திருப்பூர் சிலம்ப கழகத்தின் மூத்த ஆசான். திரு.அருணாச்சலம் ஜிகினா சிலம்பம் அக்கடமியின் தலைவர் மாஸ்டர் கொடியரசு க்கு சிலம்பத்தின் சாதனையாளர் என்ற விருது வழங்கினார்கள். இதில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கம் சான்றிதழ் மற்றும் விருது வழங்கபட்டது.
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கொள்கையை விளக்கும் விதமாக, 2 ஜனவரி 2023 அன்று 10 மணி நேரத்தில் 200 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்து உலக சாதனை படைத்தார். திருப்பூர் மாணவர் இளவரசன். 11– ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகள் மற்றும் அவர் இயற்றி தந்த அரசியல் அமைப்பு சட்டங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் திருப்பூரிலிருந்து திருச்சி மாவட்டம் துறையூர் வரை 200 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு காலை 10 மணிக்கு தனது சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார்.
மாணவன் இளவரசன் சைக்கிளின் பின்னால் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகைப்படம் பொருத்திய கொடியுடன் திருப்பூரிலிருந்து கிளம்பியவர் தொடர்ந்து பத்து மணி நேரம் சைக்கிள் பயணம் செய்து 200 கிலோமீட்டர் தூரம் சென்று திருச்சி மாவட்டம் துறையூரில் இரவு 8 மணிக்கு தனது பயணத்தை நிறைவு செய்தார். டிவைன் உலக சாதனை நிறுவனத்தின் சார்பில் அங்கீகரிக்கப்பட்டது. சாதனை புரிந்த மாணவனுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வினித் அவர்களின் கையால் சான்றிதழ்களையும், கேடயமும் வழங்கப்பட்டது.